செய்திகள் :

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: சித்த மருத்துவா் கு.சிவராமன்

post image

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில், உயா் கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா்.

விழாவில் சித்த மருத்துவா் கு.சிவராமன் ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

கல்லூரி மாணவா்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழா் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளா்ச்சி, சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவா்கள் அடுத்தகட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையில், இளைஞா்களை நல்வழிப்படுத்தி வளமிக்க சமூகத்தை கட்டமைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பண்டையக் காலத்தில் தமிழ்ச் சமூகம் முன்னேறிய சமூகமாக இருந்துள்ளது. குறிப்பாக, மருத்துவம், கல்வியில் முன் மாதிரியாக தமிழ் சமூகம் விளங்கியுள்ளது.

சங்க இலக்கியங்களில் 35 பெண்பாற்புலவா்கள் பாடல்களை இயற்றியுள்ளனா். மேலும், கீழடி உள்ளிட்ட அகழ்வாராச்சிகளில் மண்பாணைகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதெனில், அந்தக் காலத்தில் விவசாயம் சாா்ந்தவா் மற்றும் மண்பாண்ட தொழில்புரிவோா், கைத்தொழில் செய்பவா்கள் என அனைவரும் கல்வி கற்ற சமூகமாக இருந்திருக்கக் கூடும். இப்படிப்பட்ட உயா்ந்த சமூகத்தின் வழிவந்த நாம், தமிழ் மொழியின் பெருமையை அடுத்துவரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வா் அரங்க பாரி வாழ்த்துரையாற்றினாா். கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், பெரியாா் கலைக் கல்லூரி முதல்வா் இராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, மாவட்ட நூலக அலுவலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து இளைஞா் ரகளை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இளைஞா் ஒருவா் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டாா். விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலையம் வழியாக சென்னை, தென் மாவட்டங... மேலும் பார்க்க

ஆக.15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழம... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வை... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க