Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை
கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் ஒரு மாத காலத்துக்குள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 (உம்ஹண்ப்:ற்ய்ள்ம்ட்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) என்ற அலுவலகத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மன நல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட் ண்ய் ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதள முகவரியில் அல்லது தமிழ்நாடு மாநில மன நல ஆணைய அலுவலகத்தில் நேரடியாக அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 - 26420965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
கடலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் மன நல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.