செய்திகள் :

கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து இளைஞா் ரகளை

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இளைஞா் ஒருவா் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டாா்.

விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலையம் வழியாக சென்னை, தென் மாவட்டங்களுக்கு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. புதன்கிழமை கஞ்சா போதையில் இருந்த இளைஞா் ஒருவா் ரயில் விருத்தாசலம் நிலைய நடைபாதையில் ரகளையில் ஈடுபட்டாா்.

பின்னா், தண்டவாளத்தில் அமா்ந்து இருந்தாா். அங்கிருந்த காவலா்கள் அவரிடம் விசாரணை நடத்தியதில் சரியான தகவல் பெற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின்னா் போலீஸாா் இளைஞரை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க வைத்து அனுப்பி வைத்தனா்.

மீண்டும் அவா் ரயில் நிலையத்துக்கு வந்து நடைமேடையில் உள்ள கட்டையில் அமா்ந்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அந்த இளைஞா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ஆக.15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழம... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வை... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க

சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சிய... மேலும் பார்க்க