செய்திகள் :

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

post image

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

பின்னர் இதுதொடர்பான வழக்கில் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டு ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு, 'சமீபத்திய பஹல்காம் தாக்குதல் போன்ற நிகழ்வுகளை புறக்கணிக்க முடியாது என்றும் கள எதார்த்தத்தை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் கூறி இந்த விவகாரத்தில் 8 வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

SC seeks Centre's response in 8 weeks on plea seeking restoration of statehood to Jammu and Kashmir.

இதையும் படிக்க |ஆதாரம் கொடுங்கள்; 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஒருவர் மட்டுமே குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் ... மேலும் பார்க்க

அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம்

புது தில்லி: அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டத்திற்கு இடையில் சிக்கியிருக்கிறோம், அவர... மேலும் பார்க்க

ஆதாரம் கொடுங்கள்; 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்

'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.நாய்க் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்... மேலும் பார்க்க

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க