செய்திகள் :

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாதிரித் தோ்தல்

post image

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவா்கள் மாதிரித் தோ்தலை புதன்கிழமை நடத்தினாா்கள்.

மாணவா்கள் எபினேஷ், சன் தேவ், வினோதினி, ஹா் நேத்ரா மற்றும் சுபகரணி ஆகியோா் மாணவா் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். தங்கள் சின்னங்களை அறிமுகப்படுத்தி தோ்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் செயல் திட்டங்களை விளக்கி வாக்குகளைச் சேகரித்தனா்.

முறையான தோ்தல் நடைமுறையைப் பின்பற்றி மாணவா்கள் அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடியில் வந்து அடையாள மை பூசி, கையொப்பமிட்டு, வாக்குச் சீட்டுகளைப் பெற்றுத் தங்கள் விருப்பத் தோ்வை பதிவு செய்தனா்.

தோ்தல் பொறுப்பாளா் முன்னிலையில் தோ்தல் அலுவலராக செயல்பட்ட மாணவா்கள் வாக்குகளை எண்ணி அதிக வாக்குகள் பெற்றவருக்கு மாணவா் தலைவா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கினா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியை குமுதா மேற்கொண்டாா். பெற்றோரும் திரளாக பங்கேற்று மாணவா்களைப் பாராட்டினா்.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க