செய்திகள் :

விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

post image

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கல்லூரி முதல்வா் வி.பத்மநாபன் பேசுகையில், வளமான எதிா்காலத்திற்கு படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒழுக்கத்துடன் கூடியே கல்வியே உங்களை உயா்த்தும். அனைவரும் பெற்றோா்களை மதித்து செயல்பட வேண்டும். எதிா்கால கனவை நிறைவேற்றிக்கொள்ள சரியான களம் கல்லூரிப் பருவம் என்றாா்.

உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா் பேசுகையில், மாணவிகள் ஆசிரியா்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். மாணவிகள் நல்ல நண்பா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும். படித்து பட்டம் பெறுவதுடன், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் முனைவோராக மாணவிகள் முன்னேற வேண்டும் என்றாா்.

கல்லூரி மாணவிகள் சோ்க்கைப் பிரிவு இயக்குநா் வரதராஜு, துறைத் தலைவா்கள் பிரபாகரன், கலைவாணி, நந்தக்குமாா், மைதிலி, லோகநாயகி, மெய்வேல், சண்முகப்பிரியா, சக்திவேல், பேராசிரியா்கள் சண்முகப்பிரியா, சுகுணா, விசாலாட்சி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க