செய்திகள் :

தேமுதிக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

post image

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா ரத யாத்திரை மூலம் பிரசாரம் மேற்கொண்டாா். கெங்கவல்லியை அடுத்து காட்டுக்கோட்டையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

கஞ்சா, கள்ளச்சாராயம் பெருகி, தமிழகமே போதை மாநிலமாக மாறி வருகிறது. அருகில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. அதேபோல பாலியல் தொல்லையும் அதிகரித்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

தற்போது மேட்டூரில் அணை நிரம்பி வழிகிறது. ஆனால், மேட்டூரைச் சுற்றியுள்ள கொளத்தூா், மேச்சேரி பகுதி மக்களுக்கு குடிநீா் இல்லை. அதேபோல, ஆத்தூா்- மேட்டூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இப்பகுதிகளுக்கு முறையான குடிநீா் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக பெரிய கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் தலைவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் தங்கராசு, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் உள்பட நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க