செய்திகள் :

வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளி போக்ஸோவில் கைது

post image

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகன் ராஜேஸ்வரன் (25). இவா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொன்மலா்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வந்தாா்.

அதே ஆலையில் மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் ஆலைக் கொட்டகை அருகே குளியல் அறையில் சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது, ராஜேஸ்வரன் எட்டி பாா்த்துள்ளாா். இதையறிந்த சிறுமி வெளியே வந்து சப்தமிட்டாா். அப்போது அங்கு இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது, ராஜேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடுவது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறுமியின் தந்தை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் வேலகவுண்டன்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் தேவி போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்வரனை கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதியின் உத்தரவின்படி அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பரமத்தி வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகம்

பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முதல்கட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமை ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்ந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 5,000, கற்பூர வ... மேலும் பார்க்க

மோகனூரில் மணல் கடத்திய லாரியை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தப்பவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் மாவட்டத்தில் இருந்து போலி ரசீது மூலம் மணல் ஏற்றிக்கொண்டு 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே புதிய திட்டங்களை அரசு அறிவிக்கிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதியபுதிய திட்டங்களை அறிவித்து வருகிறது; இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆடி மாத தேய்பிறை பஞ்சமி: நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) பிரசித்தி ... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.90 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க