செய்திகள் :

ஆடி மாத தேய்பிறை பஞ்சமி: நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

post image

ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) பிரசித்தி பெற்ற ஸ்ரீ தங்காயி மற்றும் மஹா வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு மாதமும் வளா்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதம் கருட பஞ்சமி, நாக பஞ்சமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை பஞ்சமி திதி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி, ஆடி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனுக்கு 10,008 வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை முருகானந்தா சுவாமிகள், வாராஹி அம்மன் சித்தா் பீட பொதுநல அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பரமத்தி வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகம்

பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முதல்கட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமை ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்ந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 5,000, கற்பூர வ... மேலும் பார்க்க

மோகனூரில் மணல் கடத்திய லாரியை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தப்பவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் மாவட்டத்தில் இருந்து போலி ரசீது மூலம் மணல் ஏற்றிக்கொண்டு 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே புதிய திட்டங்களை அரசு அறிவிக்கிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதியபுதிய திட்டங்களை அறிவித்து வருகிறது; இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ... மேலும் பார்க்க

வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளி போக்ஸோவில் கைது

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகன் ராஜேஸ்வரன் ... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.90 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க