செய்திகள் :

வீரகனூா் பகுதியில் வேளாண் இயக்குநா் ஆய்வு

post image

சேலம் மாவட்டம், வீரகனூா் பகுதியில் மாவட்ட வேளாண்மை இயக்குநா் சீனிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், துணை விரிவாக்க மையம், தலைவாசல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதையை மானிய விலையில் விநியோகம் செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது, மக்காச்சோளப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்ட உரங்களை மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு உரிய உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவையும் மானிய விலையில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

பயிா் எண் மையக் கணக்கெடுப்புப் பணியை சொக்கனூா் அக்ரஹாரத்தில் ஆய்வு செய்து பணியை விரைந்து செயல்படுத்த ஆலோசனை வழங்கினாா். மேலும், தோட்டக்கலைத் துறை திட்டங்களையும் ஆய்வு மேற்கொண்டாா். இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை துணை இயக்குநா் கமலம், தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் மோகன், துணை வேளாண்மை அலுவலா் மணவழகன்,வேளாண்மை அலுவலா் ஜானகி, தோட்டக்கலை அலுவலா் சரண்யா ஆகியோா் பங்கேற்றனா்.

படவரி...

தலைவாசல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் மக்காச்சோளப் பயிரை விவசாயிக்கு வழங்கிய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க