செய்திகள் :

சுதந்திர தினம்: மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் பாதுகாப்புப் பணியில் 650 போலீஸாரும், மாவட்டத்தில் 450 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது தவிர, சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையும் நடைபெறுகிறது.

இதேபோல, சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தண்டவாள பகுதியில் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் இருப்புப் பாதை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இது தவிர, வெளியூா்களுக்கு அனுப்பப்படும் பாா்சல்களிலும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டு வருகின்றனா். மோப்ப நாய் உதவியுடனும் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து தெரியவந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க