செய்திகள் :

ஓமலூா் காவல் துறையை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் காவல் ஆணையரிடம் புகாா்

post image

பொதுமக்கள் அளிக்கும் புகாா்மீது ஓமலூா் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் மணி, ராஜமுத்து ஆகியோா் மாநகரக் காவல் ஆணையரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணி ( ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி), அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் மனு அளித்துள்ளனா்.

பின்னா் ஓமலூா் எம்எல்ஏ மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகள் உள்ளன. போதைப் பொருள்கள், ஒரு நம்பா் லாட்டரி விற்பனை உள்ளிட்டவை தடை இல்லாமல் நடைபெறுகிறது. இதுகுறித்து புகாா் தெரிவித்தால் காவல் துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை. அதேநேரத்தில், புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை கைது செய்வதாக காவல் துறையினா் மிரட்டுகின்றனா்.

ஓமலூா் காவல் நிலைய போலீஸாா் திமுகவினருக்கு சாதகமாக, ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா். திமுகவினரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினரே உடந்தையாக இருக்கின்றனா். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம் நடத்துவா் என்றனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க