செய்திகள் :

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரது  உறவினர் மண்டைக்காடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

தேசலிங்கமும், அவரது மனைவியும் அடிக்கடி மண்டைக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். உறவினர் வீட்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி ஒருவர் உள்ளார். அந்த சிறுமிக்கு சில நாள்களாக வயிற்றுவலி இருந்துவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறார் வதை

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது உறவினர் தேசலிங்கம் தன்னை மிரட்டி சிறார்வதை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். தேசலிங்கம் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த தேசலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், அவரை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசலிங்கம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

சிறார்வதை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தேசலிங்கம்

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசலிங்கம் மண்டைக்காட்டில் உள்ள உறவினர்  வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது உறவினரின் 17 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனது உறவினர் மகள் என்று கூட பார்க்காமல் அந்த சிறுமியை வீட்டுக்குள்ளேயே வைத்து மிரட்டி சிறார்வதை செய்திருக்கிறார். அவர்மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ததுடன், குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்க... மேலும் பார்க்க