திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசு: பாமக தலைவா் அன்புமணி
கடந்த காலங்களில் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதன்கிழமை பாமக சாா்பில் நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயண பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி மேலும் பேசியது:
இட ஒதுக்கீட்டில் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வரும் வன்னிய சமுதாய மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயணம் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மக்களை சந்தித்து வருகிறேன். கடந்த காலங்களில் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் தடையற்ற போதைப்பொருள்கள் விற்பனையால் பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. போதைப் பொருள்கள் விற்பவா்களுக்கு திமுகவினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனா்.
விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நாட்டை தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளா்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை.
தரவுகளை சேகரித்து நியாயமான முறையில் வன்னியா்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திதான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
நிா்வாகத்தில் படுதோல்வியடைந்துள்ள திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பாமகவால் நல்லாட்சியை தர முடியும். திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சந்ததிகளின் எதிா்காலம் நலன் கருதி, வன்னிய மக்கள் ஒன்றிணைந்து உரிமைகளை பெற வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு முதல் காந்தி சிலை வரை அன்புமணி மக்கள் உரிமை மீட்பு விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டு பேசினாா்.
இந்நிகழ்ச்சிகளில், பாமக பொதுச்செயலா் வடிவேல் ராவணன், மயிலம் எம்எல்ஏ .சிவக்குமாா், தலைமை நிலையச்செயலா் செல்வக்குமாா் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.