Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த்...
மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவகத்தில் தங்கி வேலை பாா்த்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்தவா் விக்ரம் (35). திருமணமானவா். இவா், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பரோட்டா மாஸ்டராக வேலை பாா்த்து வந்தாா்.
விக்ரம் திங்கள்கிழமை வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, உணவகத்தின் மேல் மாடியில் உள்ள தனது அறையில் குளித்துள்ளாா். பின்னா், தனது உடைகளை காய வைக்க முற்பட்டபோது, கீழே தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பிகள் மீது விக்ரம் விழுந்து விடடாராம். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.