செய்திகள் :

ஆளுநர் தேநீர் விருந்து: "வழக்கம் போல அழைத்தார்; வழக்கம் போலப் பங்கேற்க மாட்டோம்" - திருமாவளவன்

post image

சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் பண்டிகையின்போது ஆளுங்கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆளுநர் தரப்பிலிருந்து தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆண்டுதோறும் அழைப்பு விடுக்கப்படும்.

ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது, அரசு நிகழ்ச்சிகளில் இந்துத்துவா கருத்துக்களைப் பரப்புவது, திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகப் பேசுவது என ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளால் ஆளுநர் தேநீர் விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றன.

இருப்பினும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணித்தபோதும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உட்பட தி.மு.க அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்தை தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.

இவ்வாறான சூழலில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு, வழக்கம் போல அரசியல் கட்சிகளுக்குத் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதனைப் புறக்கணித்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "வழக்கம்போல மேதகு ஆளுநர் அவர்கள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் வி.சி.க பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான்

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு; ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு; பின்னணி என்ன?

அனைத்து மாணவ மாணவிகளையும் போல ஜீன் ராஜன் என்ற மாணவி தனது பட்டத்துடன் மேடையேறி வந்தபோது ஆளுநர் ஆர். என்.ரவி அவருடன் புகைப்படம் எடுக்க கையை நீட்டினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மாணவி, துணை வேந்தர் சந்த... மேலும் பார்க்க

``டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் இணையப்போகிறோமா?’’ - விளக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை மேற்கொள்கிறார். இதையொட்டி, திருப்ப... மேலும் பார்க்க

அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் பில்டிங் அப்டேட்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பொதுநல வழக்கு ஒன்றில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணி... மேலும் பார்க்க

மைத்ரேயன்: திமுக-வில் இணைந்த RSSகாரர்- ஓயாத கட்சித் தாவலின் பரபர பின்னணி

ஆர்.எஸ்.எஸ் டு தி.மு.கஅ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க உறுப்பினர் அட்டைய... மேலும் பார்க்க