செய்திகள் :

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு; ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு; பின்னணி என்ன?

post image

அனைத்து மாணவ மாணவிகளையும் போல ஜீன் ராஜன் என்ற மாணவி தனது பட்டத்துடன் மேடையேறி வந்தபோது ஆளுநர் ஆர். என்.ரவி அவருடன் புகைப்படம் எடுக்க கையை நீட்டினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மாணவி, துணை வேந்தர் சந்திரசேகருடன் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650 மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

ஜீன் ராஜன்
ஜீன் ராஜன்

பட்டம் பெறும் மாணவ, மாணவிகளிடம் அவர்களுக்கான பட்டங்கள் கையில் கொடுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். பெயர்களை அழைத்தவுடன் வரிசையாகச் சென்று சிறப்பு விருந்தினரான ஆளுநரிடம் பட்டத்தைக் கொடுத்து, அவர் வழங்குவது போலப் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்க வேண்டும்.

மேடையில் துணைவேந்தர் சந்திரசேகரும் உடனிருப்பார். வழக்கம் போல நிகழ்ச்சி சென்றுகொண்டிருந்த நிலையில், ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெறுபவர்கள் வரிசையில் ஜீன் ராஜன் என்ற மாணவியின் பெயர் அழைக்கப்பட்டது. அவர் மேடையேறிச் சென்றதும் வழக்கம்போல பட்டத்தை வாங்கி ஒப்படைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கையை நீட்டினார்.

மேடைக்குச் சென்ற ஜீன் ராஜன், ஆளுநரைப் பொருட்படுத்தாமல் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தைக் கொடுத்து, 'உங்களிடம் இருந்துதான் பட்டம் பெற விரும்புகிறேன்' என்றார். எதையும் எதிர்பாராத அவரும் பட்டத்தை வாங்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அதனால் விழா மேடையில் சற்று பரபரப்பு நிலவியது.

ஜீன் ராஜன்
ஜீன் ராஜன்

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அவர் வெளியில் வந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பாமல் துணைவேந்தர் சந்திரசேகர் சாரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் இணையப்போகிறோமா?’’ - விளக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை மேற்கொள்கிறார். இதையொட்டி, திருப்ப... மேலும் பார்க்க

அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் பில்டிங் அப்டேட்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பொதுநல வழக்கு ஒன்றில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணி... மேலும் பார்க்க

மைத்ரேயன்: திமுக-வில் இணைந்த RSSகாரர்- ஓயாத கட்சித் தாவலின் பரபர பின்னணி

ஆர்.எஸ்.எஸ் டு தி.மு.கஅ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க உறுப்பினர் அட்டைய... மேலும் பார்க்க

தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெண்; போலீஸ் விசாரணை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற கடலோரப் பா... மேலும் பார்க்க

'எங்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே....' - உழைப்போர் உரிமை இயக்கத்தின் உருக்கமான கடிதம்

தனியார்மயத்தை எதிர்த்து சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியி... மேலும் பார்க்க