செய்திகள் :

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

post image

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர்கள் குறித்த பல்வேறு தரவுகளையும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிகாரில் பாஜக தலைவர்களும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் அவர்களுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையமே வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குஜராத் மக்கள், பிகார் மாநில வாக்காளர்களாக மாறி வருகின்றனர். பாஜகவின் பொறுப்பாளரான பிகுபாய் தல்சானியா பாட்னாவின் வாக்காளராக மாறிவிட்டார். அவர் 2024 ஆம் ஆண்டு குஜராத்தில் வாக்களித்தார். அதன்பின்னர் அவர் பெயர் நீக்கப்பட்டு தற்போது பாட்னாவில் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளார். 5 ஆண்டுகள்கூட ஆகவில்லை, அவர் பிகார் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளார். பிகார் தேர்தல் முடிந்தபிறகு அவர் பெயர் அங்கு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் எங்கு செல்வார்? இந்த சதித்திட்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பாஜக மிகப்பெரிய நேர்மையற்ற செயல்களைச் செய்கிறது.

பிகாரில் வாக்குத் திருட்டு நடக்கிறது. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் இந்த சதித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது மிகத் தீவிரமான பிரச்னை" என்று பேசியுள்ளார்.

Vote chori row: Tejashwi Yadav says EC helping BJP leaders with 2 voter cards in poll-bound Bihar

இதையும் படிக்க | ஆற்றுப்படுத்துதல்! பாலியேட்டிவ் கேர் என்பது என்ன? நோயாளிகளுக்கு, முதியோருக்கு ஏன் அவசியம்?

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

பெங்களூர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் இரு ரயில்களும், பச்சை வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களும் கடந்து செல்லும் பருந்துப் பார்வை விடியோ வைரலாகி வருகிறது.ஒரே பார்வையில் நான்கு ரயில்கள் வ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மக்களவை தேர்தலின் போது வ... மேலும் பார்க்க

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வ... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க