செய்திகள் :

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

post image

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சம்பந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டத்துக்கு புறம்பாக இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு அவர் இத்தாலி குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அந்த சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர். அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன. 1980 ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட போது, வாக்குச் சாவடி 145, எண் 388 இல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும், இது சட்ட மீறலாகும். 1982 ஆம் ஆண்டு இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் 1983 இல் சேர்க்கப்பட்டது.

அப்போதும் பிரச்னை எழுந்தது. சோனியா காந்திக்கு ஏப்ரல் 30, 1983 ஆம் தேதிதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், ஜனவரி 1, 1983 தேதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236 இல் இடம்பெற்றிருந்தது.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன்? என்றுகூட நாங்கள் கேட்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் மால்வியா வெளியிட்ட படம்.

The BJP has questioned the inclusion of senior Congress leader Sonia Gandhi's name in the voter list three years before she obtained Indian citizenship.

இதையும் படிக்க : வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

பெங்களூர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் இரு ரயில்களும், பச்சை வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களும் கடந்து செல்லும் பருந்துப் பார்வை விடியோ வைரலாகி வருகிறது.ஒரே பார்வையில் நான்கு ரயில்கள் வ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத் தி... மேலும் பார்க்க

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வ... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க