செய்திகள் :

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

post image

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குச் சென்றுள்ளார் சுர்ஜீத்(33). கடந்த சனிக்கிழமை ரக்ஷா பந்தன் விழாவையொட்டி சித்தப்பாவின் மகளான தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமி, அண்ணனான சுர்ஜீத்திற்கு கையில் ராக்கி கயிறு கட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே இரவு சுர்ஜீத் நன்றாக குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அறையில் படுத்திருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை தூக்கிலிட்டதுபோல அவரை தூக்குக்கயிறில் போட்டுள்ளார்.

அடுத்த நாள் காலை, பக்கத்து அறையில் படுத்திருந்த சிறுமியின் அப்பா வந்து சிறுமியின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் காவல்துறையில் புகார் கொடுக்க, விசாரணையில் சுர்ஜீத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

விசாரணையின்போது போலீசாரை திசைதிருப்பும் விதமாக சுர்ஜீத் பேசியுள்ளார். குடும்பத்தில் மற்றவர்களிடம் கேள்வி கேட்கும்போது சுர்ஜீத் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் பின்னர் விசாரணையில் சுர்ஜீத் குற்றவாளி என்பதை அறிந்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

A young man sexually assaulted and killed a girl who was tying a rakhi

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மக்களவை தேர்தலின் போது வ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத் தி... மேலும் பார்க்க

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க