செய்திகள் :

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

post image

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன் உள்ள தூய்மைப் பணியாளர்களை கலைந்துசெல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களும் கலைந்துசெல்ல மறுத்துவிட்டதால், போராட்டக் களம் போல ரிப்பன் மாளிகை அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகைக்குள் வெளி நபர்கள் யாரும் இருக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி அனைவரையும் வெளியேற்றி வருகிறது.

பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில், இரு வழிப்பாதையில் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ச... மேலும் பார்க்க