செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

post image

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவா் கெபிராஜ். பயிற்சியின்போது, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவா், பயிற்சியாளா் கெபிராஜ் மீது புகாா் அளித்தாா்.

இது குறித்து மாணவி, கடந்த 2021ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வந்தனர்.

கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை வன்கொடுமை செய்ததாக ஒரு மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேலும் சில மாணவிகள் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே பயிற்சியாளா் கெபிராஜ் குற்றவாளி என இரண்டு நாள்களுக்கு முன்பு தீா்ப்பளித்தாா்.

இன்று குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டார். அதில், கெபிராஜூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள் வெளியான போது, தான் எந்த மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததில்லை என மகளிர் நீதிமன்ற வளாகத்தில் கெபிராஜ் கதறி அழுதார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க