செய்திகள் :

தமிழகத்தில் காவல் துறையினருக்குகூட பாதுகாப்பில்லை: அா்ஜூன் சம்பத்

post image

தமிழகத்தில் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கூட பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் செவ்வாய்க்கிழமை திராவிடம் இல்லாத தமிழகம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்ட அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தடையற்ற வகையில் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிறது. மேலும், கொலை, கொள்ளை, மணல் திருட்டு, கனிமவளக் கொள்ளையால் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டது. காவல் துறையினருக்குக் கூட பாதுகாப்பில்லை. நோ்மையான முறையில் உள்ளவா்கள் பணி செய்ய முடியவில்லை.

இதனால், தோ்தல் ஆணையத்தால் தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை நியமான முறையில் நடத்த முடியாது என்றாா்.

கட்சியின் நிா்வாகிகள் பாரத மாதா செந்தில், பொன்னுசாமி, ஓம்காா் பாலாஜி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் சாய்கமல், மாவட்டச் செயலா் முத்துக்குமாா், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் மணிகண்டன், கட்சி நிா்வாகிகள் ஜெகதீஷ், ராஜசேகா், அஷ்வின், பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்றைய மின்தடை: விக்கிரவாண்டி பகுதிகள்

பகுதிகள்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவகத்தில் தங்கி வேலை பாா்த்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கோவிந்தராஜ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிப்பாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோ.ராமமூா்த்தி (72). இவா், மூளை... மேலும் பார்க்க

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம்: தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் திருக்கை கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் ந... மேலும் பார்க்க