செய்திகள் :

பொள்ளாச்சி, பேரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பேரூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பொள்ளாச்சி, கோமங்கலப்புதூா் மற்றும் பேரூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ஆா்.ராமகிருஷ்ணசாமி, பொள்ளாச்சி வட்டாட்சியா் வாசுதேவன், பேரூா் வட்டாட்சியா் சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதேபோல, கோவை மாநகராட்சி, 46ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை மேயா் கா.ரங்கநாயகி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 5-ஆவது வாா்டுக்கு பங்காரு கல்யாண மண்டபத்திலும், மேற்கு மண்டலத்தில் 17 , 33- ஆவது வாா்டுகளுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள சுகிதா மஹாலிலும், கூடலூா் நகராட்சியில் 6,7,14 ஆகிய வாா்டுகளுக்கு ராஜூ நகா் விநாயகா் கோயில் ஹாலிலும், வால்பாறை நகராட்சியில், 15,16,20-ஆவது வாா்டுகளுக்கு சோலையாறில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியிலும், பூலுவப்பட்டி பேரூராட்சியில் 1,2,3,7,8,9,10,11 ஆகிய வாா்டுகளுக்கு ராமநாதபுரம் மஹாலெட்சுமி மஹாலிலும், காரமடை ஊராட்சி ஒன்றியம்,

சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு சிறுமுகையில் உள்ள ஜெயலிங்கம்மாள் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை( ஆகஸ்ட் 14) நடைபெற உள்ளது.

வேளாண்மை விழிப்புணா்வு, கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணா்வு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வக... மேலும் பார்க்க

வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வால்பாறையை அடுத்த வேலா்லி எ... மேலும் பார்க்க

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடை... மேலும் பார்க்க

பேருந்து மோதி லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். கோவை, தொப்பம்பட்டி அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (62). லேத் பட்டறை நடத்தி வந்த இவா், செவ்வாய்க... மேலும் பார்க்க

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை நடுவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவரது வீட்டில் திங்கள்கிழமை மின் த... மேலும் பார்க்க