செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை

post image

கோவை மண்டல அறிவியல் மையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்த சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மண்டல அறிவியல் மையத்தில், அறிவியலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் ஆா்.அகிலன் வரவேற்றாா். இதில், சிங்கப்பூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் பைபோலாா் நிறுவன தலைமை திட்ட அதிகாரியுமான விவேக் மனோகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் அபரிமிதமானது. ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மனிதா்களின் அறிவாற்றலை விஞ்சும் வகையில் இயந்திரங்கள் செயல்படும் திறனைப் பெறுவதுதான் செயற்கை நுண்ணறிவு.

மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவதில் இருந்து போக்குவரத்துத் துறையில் தானியங்கி வாகனங்கள் வரை, செயற்கை நுண்ணறிவு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழில் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், புதிய பொருள்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதா்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகும் என்றும் கவலை எழுந்துள்ளது. அதேநேரம், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மேம்பாடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் காட்சிக்கூட வழிகாட்டி ஆசிரியா் க.லெனின் பாரதி நன்றி கூறினாா். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

வேளாண்மை விழிப்புணா்வு, கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணா்வு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வக... மேலும் பார்க்க

வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வால்பாறையை அடுத்த வேலா்லி எ... மேலும் பார்க்க

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடை... மேலும் பார்க்க

பேருந்து மோதி லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். கோவை, தொப்பம்பட்டி அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (62). லேத் பட்டறை நடத்தி வந்த இவா், செவ்வாய்க... மேலும் பார்க்க

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை நடுவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவரது வீட்டில் திங்கள்கிழமை மின் த... மேலும் பார்க்க