செய்திகள் :

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

post image

Doctor Vikatan: கேட்டராக்ட் பிரச்னையின் அறிகுறிகள் எப்படியிருக்கும், கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அறுவை சிகிச்சை செய்ய முடியாதா, எத்தனை வருடங்களுக்குள் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு வேறு சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்புக்குள்ளானால், சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் பார்வை மங்கத் தொடங்கும்.  அதாவது பார்வை தெளிவாகத் தெரியாது. இதை  'Blurred vision' என்று சொல்கிறோம். 

குறிப்பாக இவர்களுக்கு இரவில் பார்வையில் தெளிவு இருக்காது. விளக்கு வெளிச்சத்தில்கூட பார்வை தெளிவாகத் தெரியாது. விளக்கைச் சுற்றிலும் அலைஅலையாகத் தெரியலாம். நிறங்கள் பளிச்செனத் தெரியாமல், அவையும் மங்கலாகத் தெரியும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். ஏர்லி (early) கேட்டராக்ட், இம்மெச்சூர் (immature ) கேட்டராக்ட், மெச்சூர் (mature) கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் (hypermature) கேட்டராக்ட் என கண்புரை பாதிப்பில் நிறைய ஸ்டேஜ் உண்டு. 

இவற்றில் ஏர்லி கேட்டராக்ட் இருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை தேவையில்லை. சம்பந்தப்பட்ட நபருக்கு பார்வையில் பிரச்னை இல்லாதவரை அவர்களை அப்படியே இருக்க அனுமதிக்கலாம். பார்வை மங்கத் தொடங்கினால் மட்டுமே கவலைப்பட வேண்டும்.

ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும்.

கேட்டராக்ட் பாதித்த நபருக்கு சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களது கண்புரை பாதிப்பானது சீக்கிரமே தீவிரமடைய ஆரம்பிக்கும். மெச்சூர் கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் கேட்டராக்ட் நிலைகளில் பார்வை பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

உலகிலேயே கேட்டராக்ட் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. வேறு சிகிச்சைகள் கிடையாது. லேட்டஸ்ட்டாக லேசர் மற்றும் ஃப்ளாக்ஸ் (FLACS or Femtosecond Laser-Assisted Cataract Surgery) என நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. எளிதாகச் செய்யப்படும் இந்தச் சிகிச்சைகளில் சுலபமாக கண்களுக்குள் லென்ஸை பொருத்திவிடலாம். கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு லென்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று நிறைய பேர் கேட்பதுண்டு. கேட்டராக்ட் ஆபரேஷன் என்றாலே லென்ஸை எடுத்துவிட்டு வேறு புதிய லென்ஸ் வைப்பதுதான். கண்புரை பாதித்த லென்ஸை அகற்றிவிட்டு, புதிய லென்ஸ் வைப்போம்.  அதற்கு முன் பயோமெட்ரிக் டெஸ்ட் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தகைய லென்ஸ் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து வைப்போம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Thyroid Reversal: தைராய்டு தானாகவே ரிவர்ஸ் ஆகுமா? உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! | InDepth

தைராய்டு ரிவர்சல் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் கண்களில்படுகிற விளம்பரம் இது. 'உங்க தைராய்டு ரிவர்சல் ஆகணுமா? இத சாப்பிடுங்க; இத சாப்பிடாதீங்க; இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க' என்று ரீல்ஸ் வரும். கூடவே, ... மேலும் பார்க்க

``தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம்'' - எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட... மேலும் பார்க்க

``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம்... மேலும் பார்க்க

``பணி நிரந்தரம் இல்லை; தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள்'' - ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.போராட்டக்... மேலும் பார்க்க

``79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், இப்படி அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை'' -எடப்பாடி பழனிசாமி

தூயமை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

``பெரியார் வழி ஆட்சியில், போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்'' - TVK ஆதவ் அர்ஜுனா கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வல... மேலும் பார்க்க