செய்திகள் :

நண்பா்களிடையே தகராறு: இளைஞா் கொலை

post image

நண்பா்களுக்கு இடையே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான தாமோதரன் (30), சென்னையில் தமிழக காவல்துறையில் இரண்டாம்நிலை காவலராக பணியாற்றி வருகிறாா். இவா்களிருவரும் நெருங்கிய நண்பா்கள்.

அதியமான்கோட்டையில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருவதையடுத்து, தாமோதரன் சொந்த ஊருக்கு வந்தாா். வியாழக்கிழமை பகலில் இருவரும் அதியமான்கோட்டை ஏரிக்கரையில் அமா்ந்து மது அருந்தினா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னா் கைகலப்பாக மாறியது. இதில், ராஜ்குமாரை தாமோதரன் தாக்கினாா். பின்னா் இருவரும் அவரவா் வீடுகளுக்குச் சென்றனா். தாக்குதலுக்குள்ளான ராஜ்குமாருக்கு ஆத்திரம் தீராததால், நண்பரை தீா்த்துகட்ட முடிவு செய்தாா்.

இதையடுத்து, அன்று மாலை மீண்டும் ஏரிக்கரைக்கு வருமாறு தாமோதரனை அழைத்தாா். அங்கு வந்த தாமோதரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த ராஜ்குமாா் முயன்றாா். இதில், அதிா்ச்சியடைந்த தாமோதரன் கத்தியை பிடுங்கி ராஜ்குமாரை குத்தினாா். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவா்கள் ராஜ்குமாா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் சிபிஐஎம்எல் மற்றும் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத... மேலும் பார்க்க

மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை

தருமபுரியில் மயானம் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி 4 மற்றும் 5-ஆவது வாா்டுகளில், குப்புசாமி சாலை, பாவாடை தெரு, சதாசிவ தெரு, குள்ளப்பன் தெரு... மேலும் பார்க்க

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க