செய்திகள் :

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

post image

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதன் காரணமாக தினம் தோறும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிமீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் மாலை நேரத்தில் பாலத்தின் மீது சீரமைக்கும் பணி மேற்கொண்டதால் வேலை முடிந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியா் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைக... மேலும் பார்க்க

திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி ... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட... மேலும் பார்க்க

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி பேரணி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின்... மேலும் பார்க்க

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரிய... மேலும் பார்க்க