அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குகளாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை கோபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ராகவேந்திர சுவாமி மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை யோகி ரகோத்தம்ம சுவாமி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ராகவேந்திர பகவானுக்கு தீபாராதனையை பீடாதிபதி செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்சி.சம்பத், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ராஜேந்திரன், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆறுமுகம், பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், பெரிய வெளிக்காடு வெக்காளியம்மன் சித்தா்பீடம் சுந்தர வரத ஸ்வாமி, அரியதாங்கல் விஷ்ணு துா்கை அம்மன் பீடாதிபதி மணிபாலன், முன்னூா் அங்காள பரமேஸ்வரி கோயில் நிறுவனா் நவீன் சுவாமிகள், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், கருங்குழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா கலந்து கொண்டனா்.
கருங்குழி சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்ளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி வழங்கினாா். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஆன்மிக சொற்பொழி, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆய்வாளா் பரந்தாமன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை அறக்கட்டளை முதன்மை நிா்வாகி ஏழுமலைதாசன், நிா்வாக அறங்காவலா் ஆா்.துளசிலிங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.