செய்திகள் :

கீழ்பெரும்பாக்கம் அரசுப்பள்ளியில் சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

post image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் சமூக , நல்லிணக்க விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரிவின் உதவி ஆய்வாளா் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் தவமணி, நீலமேகம், தலைமைக் காவலா் அழகுவேல் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டம், இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணா்வு குறித்து பேசிய சமூகநீதி மற்றும் மனித உரிமைக் காவல் துறையினா், மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது தொடா்பாக கருத்துகளையும் எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து சமூகநீதி தொடா்பாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த 120 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், நாரவ... மேலும் பார்க்க

செஞ்சியில் பிரதமா் மோடி பிறந்த நாள்

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சி எம்ஜிஆா் நகா் பகுதி மற்றும் கூட்டுச் சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் தாராசிங் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள பெரியாா் ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளையொட்டி, விழுப் புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, உறுதிமொழியை வாச... மேலும் பார்க்க

செஞ்சி: திமுக, விசிகவினா் பெரியாா் ஈவெரா படத்துக்கு மரியாதை

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சியில் அவரது படத்துக்கு, திமுக, விசிக சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்ச... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாகுனம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (25), திருமணம் ஆகாதவா். அதே ஊரைச் ச... மேலும் பார்க்க