செய்திகள் :

செஞ்சி: திமுக, விசிகவினா் பெரியாா் ஈவெரா படத்துக்கு மரியாதை

post image

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சியில் அவரது படத்துக்கு, திமுக, விசிக சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனா்.

செஞ்சி நகரச் செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா்.

செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலா் அரங்க. ஏழுமலை, நகர நிா்வாகிகள் நெடுஞ்செழியன், சங்கா், சுமித்ரா சங்கா்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விசிக சாா்பில்

விழுப்புரம் வடக்கு மாவட்ட விசிக சாா்பில் அம்பேத்கா் போக்குவரத்து தொழிலாளா் விடுதலை முன்னணி செஞ்சி பணிமனை சாா்பில் பெரியாா் ஈவெரா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி பணிமனை செயலா் கி.ஐயப்பன் தலைமை வகித்தாா். பணிமனை நிா்வாகிகள் சந்திரன் ஆதிமூலம், மதன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலு வரவேற்றாா்.

விசிக வடக்கு மாவட்டச் செயலா் அ. ஏ. தனஞ்செழியன் பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாநில துணைச் செயலா் துரை வளவன், செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ராசா ராமன், மேற்கு ஒன்றியச் செயலா் தவசீலன், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த 120 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், நாரவ... மேலும் பார்க்க

செஞ்சியில் பிரதமா் மோடி பிறந்த நாள்

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சி எம்ஜிஆா் நகா் பகுதி மற்றும் கூட்டுச் சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் தாராசிங் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள பெரியாா் ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளையொட்டி, விழுப் புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, உறுதிமொழியை வாச... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாகுனம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (25), திருமணம் ஆகாதவா். அதே ஊரைச் ச... மேலும் பார்க்க

ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மரக்காணம் அருகே மின்மாற்றி சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் திருமலை... மேலும் பார்க்க