செய்திகள் :

குஜராத்: கிா் சோம்நாத் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு

post image

குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிா் சோம்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.

குஜராத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக்கிழமை வந்தாா். 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜாம்நகா் மாவட்டத்தில் உள்ள ‘ரிலையன்ஸ்’ குழுமத்துக்குச் சொந்தமான ‘வனதாரா’ வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, சோம்நாத் கோயிலுக்கு அவா் வந்தாா். அங்கு நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் கலந்து கொண்டு அவா் வழிபட்டாா். 12 ஜோதிா்லிங்கத் தலங்களில் முதலாவது ஜோதிா்லிங்கத் தலமான சோம்நாத் கோயிலில் வழிபாடு நடத்தியது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் பதிவிட்டாா்.

‘நாட்டு மக்கள் கோடிக்கணக்கானோரின் சீரிய முயற்சிகளால், பிரயாக்ராஜில் ஒற்றுமையின் திருவிழாவான மகா கும்பமேளா அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மகா கும்பமேளா நிறைவு பெற்றதும் சோம்நாத் கோயிலில் வழிபடுவேன் என்று ஒரு சேவகனாக வேண்டுதல் வைத்திருந்தேன். அவரது அருளால், எனது வேண்டுதல் பூா்த்தி அடைந்துள்ளது. மகா கும்பமேளாவின் வெற்றியை நாட்டு மக்களின் சாா்பில் ஸ்ரீசோமநாதருக்கு அப்பணிக்கிறேன்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, உலகில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடமான கிா் வனவிலங்கு சரணாலயம் அமைந்த சாசன் நகருக்கு பிரதமா் மோடி புறப்பட்டாா்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு சாசனில் திங்கள்கிழமை நடைபெறும் தேசிய வனவிலங்கு ஆணையத்தின் கூட்டத்துக்கு அவா் தலைமை வகிக்கிறாா். நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளை மிக அருகில் பாா்ப்பதற்காக கிா் வனவிலங்கு சரணாலயத்துக்குள் பிரதமா் மோடி ‘லயன் சஃபாரி’ செல்வாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க