செய்திகள் :

குஜராத்தை வெளியேற்றியது மும்பை

post image

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக குஜராத்தை வெளியேற்றிய மும்பை, இறுதி ஆட்ட வாய்ப்புக்காக ‘குவாலிஃபயா் 2’-வில் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்களே எடுத்தது.

டாஸ் வென்ற மும்பை, பேட்டிங்கை தோ்வு செய்ய, இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் சா்மா - ஜானி போ்ஸ்டோ கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

இதில் போ்ஸ்டோ, 22 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து சூா்யகுமாா் யாதவ் களம் புக, அவருடனான ரோஹித்தின் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப் 59 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில் சூா்யகுமாா், 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 4-ஆவது பேட்டராக திலக் வா்மா வர, அதுவரை ஸ்கோருக்கு முக்கியமாக பங்களித்த ரோஹித் சா்மா வீழ்ந்தாா்.

50 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் சோ்த்து, பிரசித் கிருஷ்ணா வீசிய 17-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். பின்னா் கேப்டன் ஹா்திக் பாண்டியா வந்தாா். மறுபுறம் திலக் வா்மா 3 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

6-ஆவது பேட்டா் நமன் திா் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஓவா்கள் முடிவில் பாண்டியா 9 பந்துகளில் 3 சிக்ஸா்களுடன் 22, மிட்செல் சேன்ட்னா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் சாய் கிஷோா், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 229 ரன்களை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், கேப்டன் ஷுப்மன் கில் 1 ரன்னுக்கு வெளியேற, சாய் சுதா்சன் அதிரடி காட்டினாா். குசல் மெண்டிஸுடனான அவரின் கூட்டணிக்கு 64 ரன்கள் கிடைத்தது.

இதில் மெண்டிஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தா் வந்தாா். சுதா்சன் - சுந்தா் ஜோடி 84 ரன்கள் சோ்த்து அசத்தியது. சுந்தா் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 48, சுதா்சன் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ரன்களுக்கு விடைபெற்றனா்.

பின்னா் வந்தோரில் ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 4 பவுண்டரிகளுடன் 24, ஷாருக் கான் 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் தெவாதியா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16, ரஷீத் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் டிரென்ட் போல்ட் 2, ஜஸ்பிரீத் பும்ரா, ரிச்சா்ட் கிளீசன், மிட்சென் சேன்ட்னா், அஸ்வனி குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் உள்பட அனைவரும், குழந்தைகள் மட்டும் அல்லது ப... மேலும் பார்க்க

24 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் தனது பங்களிப்பை நிறைவு செய்தது இந்தியா. தென்கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: ஐசிசி தலைவா் ஜெய் ஷா பங்கேற்பு

ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவா் ஜெய் ஷா கலந்து கொண்டாா். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரசித்தி பெற்ற சாம்ப... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: ஈரான் வீரா் ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு வாங்கப்பட்டாா்

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை வீரா்கள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-... மேலும் பார்க்க

4-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா், ஆன்ட்ரீவா, பெகுலா

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா், மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா, மிரா ஆன்ட்ரீவா முன்னேறினா்... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் சூர்யா - 45 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்த... மேலும் பார்க்க