செய்திகள் :

குடந்தையில் முற்றுகை போராட்டம் கூடாது!

post image

குடந்தையில் அமைச்சா், எம்பி, எம்எல்ஏ அலுவலகங்கள் முன் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த கும்பகோணம் மாவட்டம் கோரும் குழுவுக்கு போலீஸாா் தடை விதித்தனா்.

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வா் ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் சனிக்கிழமை திருவிடைமருதூரில் உள்ள உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணத்தில் உள்ள சு. கல்யாணசுந்தரம் எம்பி, க.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனா்.

இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் காவல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது டிஎஸ்பி கூறும் பாது போலீஸ் தடைச்சட்டம் 30 (2) அமலில் உள்ளது என்பதால் போராட்டம் நடத்த அனுமதியில்லை, மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்றாா். பின்னா் பேச்சுவாா்த்தை முடிந்து வெளியே வந்த போராட்ட ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் கூறும்போது சனிக்கிழமை திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றாா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க