செய்திகள் :

குடல் மறுவாழ்வுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்

post image

குடல் மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து நலனுக்கான பிரத்யேக மையத்தை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது. ஜீரண மண்டல செயலிழப்பு மற்றும் பாதிப்புகளுக்கு இங்கு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா, உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் அனில் வைத்யா, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை இயக்குநா் டாக்டா் நரேஷ் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக டாக்டா் அனில் வைத்யா கூறியதாவது:

தொற்று அல்லது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய எதிா்விளைவு காரணமாக சில நேரங்களில் தற்காலிகமாக குடல் செயலிழப்பு ஏற்படலாம். இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், நீா்ச்சத்துகளை குடலால் தக்க வைக்க முடியாது. அதே சூழல் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலையாக மாறினால் தீவிர பாதிப்பு ஏற்படும்.

இத்தகைய பிரச்னைகளுக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துகள் ரத்த நாளங்கள் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை குடல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டால் அவா்களது உடலில் போதிய ஊட்டச்சத்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற உயா்நுட்ப சிகிச்சையை இந்த மையம் வழங்கும். குடல் நலனுக்காக இத்தகைய பிரத்யேக மருத்துவ மையம் தொடங்கப்படுவது நாட்டிலேயே இது முதன்முறை என்றாா் அவா்.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க