செய்திகள் :

குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிமன்றக் காவல்!

post image

மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 3 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைக்கால சிறப்பு வகுப்புக்குச் சென்ற 3 வயது குழந்தை ஆருத்ரா, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தார்.

இதுதொடர்பாக  காவல் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் உரிமையாளர் திவ்யா, உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்டிஓ, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்தனர்.

பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக நினைவு நாள்: உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த த... மேலும் பார்க்க

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!

நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்... மேலும் பார்க்க

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி

கரூர்: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மாமனார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா த... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... சந்திப்பிழை

சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக1. அ) மருத்துவப் படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.ஆ) மருத்துவ படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.இ) மருத்துவப் படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.ஈ) மருத்துவ படி... மேலும் பார்க்க

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி மாவட்டம் பக்கலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் ... மேலும் பார்க்க