சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக நினைவு நாள்: உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உண்ணாவிரதம் இருந்து உப்பு அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர்.
இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி,மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நிகழாண்டில் இந்த போராட்டத்தின் 95 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை (ஏப்.30) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட காங்கிரஸ் குழுவினா் வேதாரண்யத்துக்கு வந்தடைந்தனா். அவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
.

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி
தொடா்ந்து, நாகை மாவட்டம்,வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் வளாகத்தில் புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, மாநில பொருளாளர் ரூபி.மனோகரன், மயிலாடுதுறை எம்.பி சுதா, குருகுலம் நிர்வாக அறங்காவலர் அ.வேதரத்னம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், திருச்சியில் இருந்து வந்திருந்த சக்தி செல்வகணபதி தலைமையிலான யாத்திரைக் குழுவினர், காங்கிரஸார்,சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.குருகுலம் பள்ளி மாணவிகள் பங்கேற்று தேசபக்தி பாடல்களை பாடினர்.
முன்னதாக,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்திலிருந்து பாதயாத்திரையாக சென்று அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் வளாகத்தை அடைந்தனர்.