செய்திகள் :

குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்

post image

புது தில்லி: குடிமைப் பணிக்கு தோ்வுக்கு தயராகி வந்த 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், பயிற்சி மையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சிங் ஆகியோருக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ரூ.1 லட்சம் தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரு உத்தரவாதங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்கினாா்.

வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளனா்.

மத்திய தில்லியின் பழைய ராஜீந்தா் நகரில் கடந்த ஆண்டு ஜூலையில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவைச் சோ்ந்த தன்யா சோனி (25) மற்றும் கேரளத்தைச் சோ்ந்த நெவின் டெல்வின் (24) ஆகிய மாணவா்களும் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அலட்சியம், கடமைகளைச் செய்யத் தவறுதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் ஆகிய பல்வேறு குற்றங்களுக்காக உள்ளூா் அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க