செய்திகள் :

குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு புதன்கிழமை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற உள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் பங்கேற்று, பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளாா்.

இதற்காக அவா் புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை மாவட்டம், சூலூா் விமானப் படைத் தளத்துக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அங்கு அவரை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா்.

பின்னா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புத்தகம் வழங்கி வரவேற்றாா். அப்போது, ராணுவ அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா ஆகியோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் விருந்தினா் மாளிகையில் இரவு தங்கினாா்.

வியாழக்கிழமை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், காலை 11 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் சூலூா் விமானப் படைத் தளத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து 12 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்கு திரும்புகிறாா்.

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க

கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் ... மேலும் பார்க்க

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க