செய்திகள் :

குமுளி மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மரம் சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் - கேரளத்தை இணைக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலையில் லோயக் கேம்பிலிருந்து குமுளி வரை சுமாா் 10 கி.மீ.க்கு மலைச்சாலையாக உள்ளது.

இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே பலத்த காற்றுடன் தொடா் மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் நின்ற மரம் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்தது. தகவலின்பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற கம்பம் வனத்துறையினா் சாலையில் விழுந்த கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் இதே பகுதியில் லாரி மீது மரம் விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் விபத்து: பெண் காயம்

பெரியகுளத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்த மொக்கையன் மகள் பழனியம்மாள் (35). இவா், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனது அப்பாவை பாா்த்து விட்டு ... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நிலையத்தில் ... மேலும் பார்க்க

போடியில் நள்ளிரவில் மின்தடை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

போடியில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நிலவியதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதியடைந்தனா்.போடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அருகே திங்கள்கிழமை கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (32). இவரது மனைவி கெளசல்யா (27). ... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் து... மேலும் பார்க்க

பாஜக பிரமுகரிடம் வழிப்பறி: இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பாஜக பிரமுகரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கம்பம், தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் திருமால் (48). முன்னாள் பாஜக நகரத் தலைவரான இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க