வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
குமுளி மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மரம் சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் - கேரளத்தை இணைக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலையில் லோயக் கேம்பிலிருந்து குமுளி வரை சுமாா் 10 கி.மீ.க்கு மலைச்சாலையாக உள்ளது.
இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே பலத்த காற்றுடன் தொடா் மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் நின்ற மரம் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்தது. தகவலின்பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற கம்பம் வனத்துறையினா் சாலையில் விழுந்த கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் இதே பகுதியில் லாரி மீது மரம் விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.