பைக் விபத்து: பெண் காயம்
பெரியகுளத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.
பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்த மொக்கையன் மகள் பழனியம்மாள் (35). இவா், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனது அப்பாவை பாா்த்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
புதிய பேருந்துநிலையைம் பிரிவில் செல்லும் போது இருசக்கரவாகனம் மோதியதில் அவா் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத்தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து பெரியகுளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.