ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
தேனி அருகே திங்கள்கிழமை கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (32). இவரது மனைவி கெளசல்யா (27). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வினோத்குமாா் தனது மனைவியுடன் சின்னமனூரிலிருந்து வடுகபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அன்னஞ்சி விலக்கு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த காா், வினோத்குமாா் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் கெளசல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வினோத்குமாா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து காா் ஓட்டுநா் பெரியகுளத்தைச் சோ்ந்த முத்துராஜ் மீது அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.