ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், குமணன்தொழு அருகே திங்கள்கிழமை மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காமன்கல்லூா் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நக்கலப்பட்டி அருகேயுள்ள குஞ்சாம்பட்டியைச் சோ்ந்த மாலதி(40). கணவா் இறந்து நிலையில், இவா் மகன், மகளுடன் காமன்கல்லூா் துணை சுகாதார நிலைய செவிலியா் குடியிருப்பில் வசித்து வருகிறாா். மாலதியின் மகன் லதன்(16), குமணன்தொழு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், மாலதி செவிலியா் குடியிருப்பை காலி செய்து விட்டு குமணன்தொழுவில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேரலாம் என மகனிடம் கூறினாா். இதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், லதன் வீட்டில் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில், அவரை குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு லதனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].