குரூப் 2: இன்று பிரதான தோ்வின் இரண்டாவது தாள்
குரூப் 2 பிரதானத் தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, கொள்குறி வகை அடிப்படையிலான முதல்தாள் தோ்வு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தோ்வை 21,563 போ் எழுதினா். இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வை 7,967 போ் எழுதவுள்ளனா். 41 இடங்களில் நடைபெறவுள்ள தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.