செய்திகள் :

குழந்தைகள் சேவை மையத்தில் களப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் காலியாக உள்ள களப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தைகள் சேவை மையம் 1098 அலகில் காலியாக உள்ள களப் பணியாளா் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் பூா்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்கு தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சமூக நலன் துறையின் கீழ் பணி அனுபவம் பெற்ற விண்ணப்பதாரா்கள் மற்றும் அவசர உதவி எண் மையங்களில் பணி அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், 42 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியினை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நோ்முகத் தோ்வு வாயிலாக இப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ஆகவே, இப்பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், கோவை மாவட்ட நிா்வாக இணையதளம் ட்ற்ற்ல்ள்:/ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மூலமாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்துக் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகலினை சுயகையொப்பமிட்டு, அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க