செய்திகள் :

கூடலூர்: சிறையில் கைதி சித்ரவதை, 6 பேர் சஸ்பெண்ட் - நள்ளிரவு வரை நீண்ட விசாரணை! என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான நிஜாமுதீன். தேவர் சோலை காவல்நிலைய போலீஸாருக்கும் நிஜாமுதீனுக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் வைத்திருந்தாக நிஜாமுதீனை கடந்த 12 -ம் தேதி தேவர்சோலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

காவல்துறையினர் விசாரணை

நிஜாமுதீன் மீது வழக்குபதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறைக்குள் வைத்து இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக அவரின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் கூடலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறைத்துறையின் கோவை மண்டல டி.ஐ.ஜி நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கூடலூர் கிளை சிறையில் விசாரணை நடத்தியிருக்கிறார். சிறைக் காவலர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிஜாமுதீனை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

அத்துமீறல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூடலுார் கிளை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த அத்துமீறல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க