செய்திகள் :

"கூட்டணி ஆட்சி அமையும் எனச் பேசியிருக்கிறாரே?" - அமித்ஷா பேச்சிற்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்

post image

எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்த நினைத்தாலும் மக்களும், அதிமுக தொண்டர்களும் தெளிவாக உள்ளனர் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் அணு குண்டு விழுந்ததைப் போல திமுக ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன, 2021 - 26 திமுக ஆட்சிக் காலம் மிக மோசமான ஆட்சிக் காலமாக மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.

சோழர்களின் காலம் பொற்காலம் எனச் சொல்வது போல ஸ்டாலின் ஆட்சிக்காலம் வேதனையின் காலமாக அமையும்.

தனி நபர் வளர்ச்சி அடையாத நிலையில் தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து விட்டது எனச் சொல்வது சுத்தப் பொய். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்றவரிடம்,

"மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியுள்ளாரே?" எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அமித்ஷா
அமித்ஷா

"சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எப்படி திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்" என்று அமித்ஷாவின் கருத்துக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது' - அமித் ஷாவை சாடிய நாஞ்சில் சம்பத்

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது..."தமிழில் பேசத் தெ... மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லிய... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சி?' - குழப்பத்தில் ADMK | தொடரும் தோட்டத்து வீடு கொலை | DMK | Imperfect Show 10.6.2025

* “பிரதமருக்கு இன்ஸ்பிரேஷன் திருக்குறள்தான்..” - ஆளுநர் ரவி * “பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஒரு விதியா?” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி* “கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி ப... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யை 14 ஆண்டுகளாகத் தெரியும்...' - தவெக-வில் இணைந்த முன்னாள் IRS அருண் ராஜ் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ். இணைப்பு நிகழ்விலேயே அவருக்கு கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அலங்கரித்திருக்கிறார்... மேலும் பார்க்க