செய்திகள் :

தேனிலவு வழக்கு: கொலைக் குற்றவாளியை கன்னத்தில் அறைந்த விமானப் பயணியால் பரபரப்பு!

post image

மேகாலயத்தில் தேனிலவு சென்ற கணவனை மனைவியே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய விவகாரத்தில், கைதான குற்றவாளியை விமானப் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்தவா் சோனம் (24) மற்றும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி இருவரும் மே 11 ஆம் தேதி திருமணமான நிலையில் தேனிலவு கொண்டாடுவதற்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தின் இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்துக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்த ராஜா ரகுவன்ஷி திடீரென மாயமான பின்னர், அவரது உடல் 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் பிணமாக கடந்த ஜூன் 2 கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில், ரகுவன்ஷியின் மனைவி, அவரின் காதலன் என அறியப்படும் ராஜ் குஷ்வாஹா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோனம் மற்றும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி.

5 பேரும் கைது செய்யப்பட்டு மேகாலயத்திலிருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்து அழைத்துவரப்பட்ட குற்றவாளி ஒருவரை அங்கு விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் கன்னத்திலேயே அறைந்தார். முகமூடி அணிந்தவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்தக் குற்றச் சம்பவத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் விமான நிலையத்தில் இருந்த பயணியே, கொலைக் குற்றவாளியை தாக்கிய சம்பவம் விடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

ராஜ் குஷ்வாஹா, விஷால் சௌகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய நான்கு குற்றவாளிகளுடன் 12 பேர் கொண்ட மேகாலய காவல்துறை குழு விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்புடன் மேகாலயா காவல்துறை குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஷில்லாங்கிற்குப் புறப்பட்டதை இந்தூர் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா உறுதிப்படுத்தினார்.

இதையும் படிக்க | லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமூடி கொள்ளையர்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.விபத்தில் சிக்கிய அதே விமானத்... மேலும் பார்க்க

மனதை உடைக்கும் பேரழிவு: குடியரசுத் தலைவர் வருத்தம்!

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட பதிவில். ஆமதாபாத்தில் நடந்தது மன... மேலும் பார்க்க

விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்... மேலும் பார்க்க

ஆமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

ஆமதாபாத் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா... மேலும் பார்க்க

விமான விபத்து: ஆமதாபாத் மருத்துவமனையில் குஜராத் முதல்வர் ஆய்வு!

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தி... மேலும் பார்க்க

ஒவ்வொரு உயிரும் முக்கியம்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்!

ஆமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்த... மேலும் பார்க்க