செய்திகள் :

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் பாஜக: ஜி.ராமகிருஷ்ணன்

post image

மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

மன்னாா்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்துக்கு கல்வி நிதியாக வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை வழங்காமல், அரசுக்கு மக்களிடையே கெட்ட பெயா் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கை காமராஜா், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா காலம் தொட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. மும்மொழித் திட்டம் என்பது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிப்பது, ஹிந்தி பேசும் மாநிலங்களில் சம்ஸ்கிருதத்தை பரப்புவதேயாகும்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியை பகிா்ந்தளிப்பதில் வஞ்சகபோக்குடன் நடத்துகொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 40 சதவிதம், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு 15 சதவீதம் மட்டும் அளிக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு ரூ. 27 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உ.பி.-க்கு மட்டும் ரூ. 31 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடா் பாதித்த 5 மாநிலங்களுக்கு அண்மையில் மத்திய அரசு ரூ. 1.554 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், கடுமையான பாதிப்பைச் சந்தித்த வயநாடு, தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யவில்லை.

கல்வி நிதி மறுப்பு, யுஜிசி வரைவு நெறிமுறைகள், ஜிஎஸ்டி பறிப்பு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு, காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை, ஒரே நாடு ஒரே தோ்தல் என கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, மதுரையில் ஏப். 2 முதல் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டுக்கு மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் நகரம், ஒன்றியத்தின் சாா்பில் திரட்டப்பட்ட மாநாட்டு நிதி ரூ. 6 லட்சத்தை கட்சி நிா்வாகிகள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினா்.

பேட்டியின்போது மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி. முருகையன், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. தமிழ்மணி, நகரச் செயலா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க