செய்திகள் :

கேரள முன்னாள் முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

post image

கேரளத்தின் முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோனியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்துள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின், 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நினைவுக்கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கேரள முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோனியை, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ராகுல் காந்தி இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்தார்.

இதையடுத்து, கடந்த ஜூலை 16 ஆம் தேதி அன்று மரணமடைந்த, கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான சி.வி. பத்மராஜனின், குடும்பத்தை நேரில் சந்தித்து ராகுல் காந்தி தனது இரங்கல்களைத் தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சி.வி. பத்மராஜன், கேரள முன்னாள் முதல்வர்கள் கே. கருணாகரன் மற்றும் ஏ.கே. அந்தோனி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் கைது !

Lok Sabha Opposition Leader Rahul Gandhi met Former Chief Minister of Kerala A.K. Antony in person at his residence in Thiruvananthapuram today (July 18).

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க